கறுவப்பங்கேணியில் ரயில் மோதுண்டு வயோதிபர் பலி

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கறுவப்பங்கேணி பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு ரயிலில் மோதுண்டு முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு கறுவப்பங்கேணி வயிரவர் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள புகையிர தண்டவாளத்தில் அமர்ந்திருந்த முதியவரே ரயிலில் மோதுண்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு புகையிர நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோதிலும் அவர் உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த சம்பவத்தில் புன்னைச்சோலையினை சேர்ந்த கந்தையா வடிவேல் என்னும் 71வயதுடைய முதியவரே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சுடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.