சுகவீனமுற்ற நிலையில் மாணவர்கள் 8 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்


(லியோன்)

கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு நகரில் உள்ள ஆண்கள் பாடசாலையை  சேர்ந்த  தரம் 7 இல் கல்வி பயிலும் மாணவர்கள்  8 பேர்  திடீர் சுகவீனமுற்ற நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின்  27 ஆம் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்



மாணவர் ஒருவர்  தனது பிறந்த நாளுக்காக சக மாணவர்களுக்கு சொக்லேட் வழங்கிய போது  அதனை சாப்பிட்ட  மாணவர்கள் வாந்தி எடுத்துள்ளதாகவும் ,அதனை  தொடர்ந்து மாணவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  ஆசிரியர்கள் தெரிவித்தனர் ,

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள  மாணவர்களின் நிலைமை தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கு வைத்தியசாலை அதிகாரிகள் அனுமதி வழங்கிய  போதிலும் ,மாணவர்களாலும் ,ஆசிரியராலும் அனுமதி வழங்கப்படவில்லை .

சுகவீனமுற்ற மாணவர்கள் தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் .