(லியோன்)
அன்னை மரியாளின் மாதமாக ஒக்டோபர் மாதம் சிறப்பிக்கப்பட்டு விசேட நிகழ்வுகள்
நடாத்தப்பட்டு வருகின்றது இதற்கு அமைய
மட்டக்களப்பு மறைக்கோட்ட பங்கு மரியாளின் சேனைகளின் ஏற்பாட்டில் அன்னை மரியாளின் மாதத்தை சிறப்பிக்கும் வகையில்
விசேட ஜெபமாலை நடைபவனி இன்றும் மாலை மட்டக்களப்பு பெரிய உப்போடை புனித லூர்து அன்னை ஆலயத்தில் இருந்து அமிர்தகழி தூய கப்பலேந்தி அன்னை ஆலயம் வரை நடைபெற்றது
நடைபவனியானது அமிர்தகழி தூய
கப்பலேந்தி அன்னை ஆலயத்தை சென்றடைந்ததும் அன்னையின் திருச்சுருவம்
ஆசிர்வதிக்கப்பட்டும் மக்களின் ஆசிருக்காக ஆலயத்தில் வைக்கப்பட்டது .
இதனை தொடர்ந்து விசேட திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது இந்த விசேட
திருப்பலியில் மட்டக்களப்பு மறை கோட்ட மரியாளின் சேனைகளின் உறுப்பினர்கள் கலந்து
சிறப்பித்தனர்