(லியோன்)
மட்டக்களப்பு மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் வாணி விழா சிறப்பு
பூஜை நிகழ்வுகள் மட்டக்களப்பு நடைபெற்றது
கல்வி, செல்வம், வீரம் ஆகியவற்றை கொண்டு விளங்கும் முப்பெரும்
தேவிகளுக்குரிய தினமாக இந்த நவராத்திரி தின ஒன்பது நாட்களும்
அனுஸ்டிக்கப்படுகின்றது.
இதனை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட மோட்டார்
போக்குவரத்து திணைக்கள உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் வாணி விழா சிறப்பு
பூஜைகள் திணைக்களத்தில் நடைபெற்றது
வாணி விழா பூஜை நிகழ்வுகளில் திணைக்கள அதிகாரிகள் , உத்தியோகத்தர்கள் , வாகன
பயிற்சி பாடசாலை சாரதிகள் என பலர் கலந்து
சிறப்பித்தனர் .