புனித யோசப்வாஸின் திருச்சிலுவைப் பயணம்



(லியோன்)

குருநாகல் மகாகல்கமுவ புனித யோசப்வாஸ் தேசிய யாத்திரை திருத்தலத்தில் இருந்து நாட்டின் சமாதானத்திற்காகவும் மக்களின் தரிசிப்புக்காக நாட்டின் மறைமாவட்ட ரீதியாக கொண்டு செல்லப்படுகின்ற புனித யோசப்வாஸின் திருச்சிலுவைப் பயணம் மட்டக்களப்பு மறைமாவட்டத்தை வந்தடைந்து
 

மட்டக்களப்பு மறை மாவட்டத்திற்கு  கொண்டு வரப்பட்ட திருச்சிலுவையினை மட்டக்களப்பு மறைமாவட் ஆயர் ஜோசெப் பொன்னையா ஆண்டகையின் தலைமையில் மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலய  பங்குதந்தை சி,வி ,அன்னதாஸ் அடிகளாரினால் பொறுப்பேற்கப்பட்டு பேராலயத்தில் விசேட திருப்பலியும் , ஆராதனைகளும்  ஒப்புகொடுக்கப்பட்டது  

இதனை தொடர்ந்து மட்டக்களப்பு தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலய பங்கு தந்தை ரமேஷ் கிறிஸ்டி அடிகளாரினால் திருச்சிலுவையினை பொறுப்பேற்கப்பட்டு விசேட திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது .

இந்த விசேட திருப்பலியில்  ,பங்கு மக்கள் , அருட்சகோதரிகள் ,கலந்துகொண்டனர்