போரதீவுப்பற்று கலாச்சார மத்திய நிலையத்தில் நவராத்திரி விழா

(எஸ்.நவா)

போரதீவுப்பற்று கலாச்சார மத்திய நிலையத்தில் நிலையப் பொறுப்பதிகாரி திரு.அ.தேவரூபன் தலைமையில் (16) செவ்வாய்க்கிழமை நவராத்திரி விழா நடைபெற்றிருந்தது.
இதன்போது கலாச்சார மத்திய நிலையத்தில் பயிற்றப்பட்ட மாணவர்களின் கலைநிகழ்சிகள் இடம்பெற்றிருந்தது. இவ்கலைநிகழ்ச்சியானது மாவட்ட மட்டம் மாகாண மட்டத்தில் சென்று முதலாவது இடத்தினையும் தேசியமட்டத்தில் 248 கலாச்சார மத்திய நிலையத்திலிருந்து இப்போடடியில் கலந்து கொண்டபோது வெல்லவெளி கலாச்சார மத்திய திலையத்தில் இரண்டு நிகழ்வுகள் முதலாவது இடத்தினையும் ஒரு இரண்டாவது இடத்தினையும் பெற்று கலாச்சாரமத்திய நியைத்திற்கும் போரதீவுப்பற்று பிரதேசசெயலகத்திற்கும் சாதனைகளை பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கு உரையாற்றிய சென்ற அனைவரும் பாரட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வின்போது பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி அவர்களும் சிறப்பதிதிகளாக கோட்டைக்கல்வி அதிகாரி ரீ.அரள்ராசா வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலய அதிபர் திரு.ச.கணேசமூர்த்தி பிரதியதிபர் திரு.மு.கோவிந்தராசா மற்றும் வளவாளர்கள் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.