(லியோன்)
மட்டக்களப்பு
பொலிஸ்
நிலையத்தின் ஒரு மாதத்திற்கான பொலிஸ்
ஆய்வு அறிக்கை பரிசோதனைகள் இன்று மட்டக்களப்பு
இந்து கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவின் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொலிஸ்
உத்தியோகத்தர்கள், பொலிஸ் புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர்கள் ,பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு மற்றும் குற்ற தடவியல் பிரிவு
உத்தியோகத்தர்களுக்கான ஒரு மாதத்திற்கான ஆய்வு அறிக்கை பரிசோதனைகள் நடைபெற்றது
இதன் போது பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான அணிவகுப்பு ,சீருடை பரிசோதனைகள்
,பொலிஸ் போக்குவரத்து பிரிவு வாகனங்கள் பரிசோதனை செய்யப்பட்டதுடன் தொடர்ந்து மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸ் உத்தியோகத்தர்களினால்
முன்னெடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான செயலமர்வும் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தயா தீகா வதுற
தலைமையில் மட்டக்களப்பு தேவநாயகம்
மண்டபத்தில் நடைபெற்றது .
மட்டக்களப்பு பிராந்திய அத்தியட்சகர் சந்திரபால பிரதம
அதிகாரியாக கலந்துகொண்ட இந்த நிகழ்வில் பொலிஸ் உத்தியோகத்தர்கள்,
பொலிஸ் புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர்கள் ,போக்குவரத்து பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள்
மற்றும் குற்ற தடவியல் பிரிவு உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்
.