ஆயர் தனது பிறந்த நாளை விசேட தேவையுடைய பிள்ளைகளுடன் கொண்டாடினார்


 (லியோன்)

மட்டக்களப்பு மறை மாவட்ட
 ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தனது 66 வது  பிறந்த தினத்தை இன்று கொண்டாடுகின்றார் .ஆயரின் நலத்திற்காக ஆசி வேண்டி  மட்டக்களப்பு புளியந்தீவு புனித  மரியாள் பேராலயத்தில் விசேட திருப்பலி இன்று ஒப்புகொடுக்கப்பட்டது
.

இதேவேளை ஆயரின் பிறந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் ஒசானம் நிலையத்தில் ஆயர் தலைமையில் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு தொடர்ந்து ஒசானம் விசேட தேவையுடைய  நிலைய பிள்ளைகளுடன் இணைந்து ஆயர் தனது பிறந்த நாளை  கேக் வெட்டி  விமர்சையாக   கொண்டாடினார் . 


இந்நிகழ்வில் சத்துருக்கொண்டான் ஒசானம்  விசேட தேவையுடைய நிலைய பிள்ளைகள் ஒசானம் நிலைய பொறுப்பாளர் அருட்சகோதரி அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் ,பொதுநிலையினர்  என பலர் ஆயரின் பிறந்த தின நிகழ்வில் கலந்துகொண்டு தமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்