சியபத நிதி நிறுவனத்தின் மாபெரும் இரத்ததான முகாம்


(லியோன்)

மட்டக்களப்பு சியபத நிதி நிறுவனம் மட்டக்களப்பு மாவாட்டத்தில் பல  சமூக பணிகளை முன்னெடுத்து வருகின்றது . இதன் கீழ் சியபத நிதி நிறுவனத்தின்  மட்டக்களப்பு கிளையின் மூன்றாவது வருடத்தினை சிறப்பிக்கும் வகையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையுடன் இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது .


தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவில் விபத்துக்கள் இடம்பெருவருகின்றது . . இதன் காரணமாக மட்டக்களப்பு  போதனா வைத்தியசாலையில் இரத்த வங்கியில் இரத்த தட்டுபாடு  நிலவி வருவதாக வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்

இதனை நிவர்த்தி செய்யும்  வகையில் சியபத நிதி நிறுவனத்தின் மூன்றாவது வருடத்தினை சிறப்பிக்கும் வகையில் முகாமையாளர் தலைமையில்  இந்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் .மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவு வைத்தியர்  வைத்தியர் கே .விவேக், வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் ,,நிறுவன ஊழியர்கள் ,பொதுமக்கள் என பலர்  கலந்துகொண்டனர்