விவேகானந்தா மகளிர் கல்லூரிக்கான மைதான காணி கையளிக்கும் நிகழ்வு


 (லியோன் )

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரிக்கு விளையாட்டு மைதானம் ஒன்று அமைப்பதற்கான உத்தியோகபூர்வமாக  காணியினை கையளிக்கும் நிகழ்வு கல்லூரி அதிபர் திருமதி ஹரிதாஸ் தலைமையில் நடைபெற்றது .


இக்கல்லூரி மாணவர்களின் விளையாட்டுத்திறனை விருத்தி செய்யும் வகையில் கல்லூரி அதிபரினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட காணி பயன்பாட்டுத் திட்டமிட்டற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிலுள்ள கல்லடி வேலூர் கிராம உத்தியோகத்தர் பிரிவில் மட்டக்களப்பு  கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரிக்கான விளையாட்டு மைதானத்திற்கான 40 ஏக்கர் விஸ்திரணம் உடைய அரசகாணி வழங்கி வைக்கப்பட்டுள்ளது  

உத்தியோகபூர்வமாக கல்லூரிக்கு வழங்கப்பட்ட மைதான காணிக்கான  அறிவித்தல் பதாகையினை திறந்து வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது .இதனை மட்டக்களப்பு மாநகர முதல்வர் கலந்துகொண்டு திறந்து வைத்தார்  ,

இந்நிகழ்வில் கல்லூரி ஆசிரியர்கள் .கல்லூரி அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்