மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்ட சிரமதான பணிகள்


 .(லியோன்)

மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த ஆடி அமாவாசை உற்சவம் எதிர் வரும் 02 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது .
 

இதனை  முன்னிட்டு மட்டக்களப்பு   முதல்வர் தியாகராஜா சரவணபவன் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர்  ஆலய வளாகத்தினை துப்பரவு செய்யும்  மாபெரும் சிரமதான பணிகள்  முன்னெடுக்கப்பட்டன

மாநகர சபையால் முன்னெடுக்கப்பட்ட  சிரமதான பணியில் மாநகர சபை பிரதி ஆணையாளர்  என் .தனஞ்சயன் உட்பட மாநகர சபை அதிகாரிகள் , பொது சுகாதார பரிசோதகர்கள் மாநகர சபை ஊழியர்கள் ,,மற்றும் மாநகர சபை உறுப்பினர்களும், ஆலய நிர்வாக உறுப்பினர்கள்  இந்த சிரமதான பணிகளின் ஈடுபட்டனர் .