இரண்டு கோடியே 70 இலட்சம் ரூபா நிதியில் நிர்மானிக்கப்பட்ட மட்டக்களப்பு மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகத்திற்கான புதிய கட்டடித்தினை ஞாயிற்றுக்கிழமை (29) காலை பிரதமர் மந்திரி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.
மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம, இராஜங்க அமைச்சர், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர், உட்பட பலர் கலந்துகொண்டனர்.