வந்தாறு மூலையில் வீட்டிலிருந்து சடலம் மீட்பு,




மட்டக்களப்பு வந்தாறுமூலையில் மேசன் தொழிலாளியின் சடலத்தை சனிக்கிழமை (28) மாலை அவர் வசித்தவந்த வீட்டிலிருந்து மீட்டதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

வந்தாறுமூலை  வீசி வீதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான தங்கராசா ஜீவானந்தராசா (வயது 44) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சனிக்கிழமை மதிய உணவின் பின் வீட்டில் படுக்கை அறைக்குள் நுழைந்த அவர் மாலை 5 மணிவரை வெளியில் வராமையினால் அவரது மகளுக்கு சந்தேகம் ஏற்பட்டு கதவை உடைத்து பார்க்கும் போது சடலமாக காணப்பட்டுள்ளார்

இதையடுத்து ஏறாவூர்ப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு பேதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர்ப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.