(லியோன்)
மட்டக்களப்பு கல்லடி
ராமகிருஷ்ணன் மிஷன் ஸ்ரீ சாரதா பாலர் பாடசாலை பாலகர்களின் விளையாட்டு போட்டிகள்
பாடசாலை அதிபர் திருமதி இந்திராணி புஸ்பராஜா
தலைமையில் மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா
தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது
ஆரம்ப நிகழ்வாக பாலகர்களினால் அதிதிகளுக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு மைதானத்திற்கு
அழைத்துவரப்பட்டனர் அதனை தொடர்ந்து தேசியகொடி ,பாடசாலைகொடி மற்றும் ராமகிருஷ்ணன்
மிஷன் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமானது
ராமகிருஷ்ணன் மிஷன் ஸ்ரீ சாரதா பாலர் பாடசாலை ஆசிரியர்கள் ,
பெற்றோர்கள் , பாடசாலை நிர்வாகம் , அதிபர் ஆகியோரின் பங்களிப்புடன் நடத்தப்பட்ட
விளையாட்டு போட்டி நிகழ்வுகளில் பாலகர்களின் விளையாட்டு நிகழ்வுகளும்
,அவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வுகளும் நடைபெற்றது ,
இந்நிகழ்வில் ஆன்மீக அதிதியாக
ராமகிருஷ்ணன் மிஷன் சுவாமி சிறீமத் மகராஜ்
, பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர முதல்வர்
தியாகராஜா சரவணபவன் , கௌரவ அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி
செயலாற்றுப் பணிப்பாளர் எஸ் .சசிகரன் ,
விசேட அதிதிகளாக மத்திய கல்வி வலைய பிரதி
கல்விப் பணிப்பாளர் ஹரிஹரன் மண்முனை வடக்கு பிரதேச செயலக முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி
உத்தியோகத்தர் .டி .மேகராஜ் ஆகியோர்
கலந்துகொண்டனர்