புனித மிக்கேல் கல்லூரி நிர்வாக சபை உறுப்பினர் ஆறுமுகம் கரிகாலன் காலமானார்


(லியோன்)

புனித மிக்கேல் கல்லூரியின்  பழைய மாணவ சங்கத்தின்  நீண்ட கால உறுப்பினரும்  ,கல்லூரி நிர்வாக சபை உறுப்பினருமான ஆறுமுகம் கரிகாலன் 25.07.2018 புதன்கிழமை காலமானார்


புனித மிக்கேல் கல்லூரியின் அருட்தந்தை வெபர் , அருட்தந்தை .எபியர்  ஆகியோரினால் பயிற்றிவிக்கப்பட்டு சிறந்த கூடைப்பந்தாட்ட வீரராக தேசிமட்டத்தில் பிரகாசித்த இவர் மட்டக்களப்பு சிங்கர் நிறுவனத்தின் ஓய்வுநிலை முகாமையாளருமாவார்

அன்னாரின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் 27.07.2018  வெள்ளிக்கிழமை மாலை 03.30  மணியளவில் இலக்கம் 26 ,இரண்டாம் குறுக்கு வீதி ,புளியந்தீவு ,மட்டக்களப்பு முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று மட்டக்களப்பு ,கள்ளியங்காடு இந்து மயாணத்தில் தகனம்  செய்யப்படும் .

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்தனை செய்வதோடு  ,அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும்  கல்லூரி பழைய மாணவ சங்க உறுப்பினர்களும் ,கல்லூரி சமூகமும் தெரிவித்துக்கொள்கின்றனர்  

தகவல் : கல்லூரி பழைய மாணவ சங்கம்