சமூக சேவையாளர் மயில்வாகனம் சச்சிதானந்தசிவம் காலமானார்.


(லியோன்)

பிரபல சமூக சேவையாளரும் ,வர்த்தகரும், விவசாய திணைக்கள உத்தியோகத்தரும் ,சமாதான நீதிவானுமான மயில்வாகனம் சச்சிதானந்தசிவம் 30 .07.2018  திங்கட்கிழமை காலமானார்


அன்னார் புளியந்தீவு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் தலைவராகவும், மட்டக்களப்பு கொத்துக்குளத்து மாரியம்மன் ஆலய நிர்வாக சபை பொருளாளரும்,  மண்டபத்தடி கமநல சேவை அமைப்பின் பொருளாளரும், கடந்த காலங்களில் பதவி வகித்து இந்துமத அறப்பணி மற்றும் பொது நல சேவைகளில் அரும்பணியாற்றியவர்

அன்னாரின் இறுதிச்சடங்குகள் 42 லேக் வீதி,  இல:02, மட்டக்களப்பில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று   01.08.2018 புதன்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு கள்ளியங்காடு இந்து மயானத்தில் தகனக்கிரியை இடம்பெறவுள்ளது .

தகவல் : குடும்பத்தினர்