தேசிய இளைஞர் சேவைகள் மன்ற செயலபாட்டின் வருடாந்த ஊடக சந்திப்பு

(லியோன்)

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின்  மட்டக்களப்பு மாவட்ட காரியாலய செயலபாட்டின் ஊடாக வருடந்தோறும் முன்னெடுத்து வருகின்ற ஊடகவியலாளர் சந்திப்பு மட்டக்களப்பில் நடைபெற்றது


இளைஞர் விவகார திட்ட முகாமைத்துவ மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயல்பட்டு வருகின்ற தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின்  மட்டக்களப்பு மாவட்ட காரியாலய செயலபாட்டின் ஊடாக    2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதம் வரை நடைமுறைப் படுத்தப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு தெளிவூட்டும் ஊடக சந்திப்பு தேசிய இளைஞர் சேவைகள் மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஹாலிதின் ஹமீன் தலைமையில் இன்று பிற்பகல் மட்டக்களப்பு கல்லடியில் உள்ள  காரியாலயத்தில் நடைபெற்றது .

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அலுவலக உத்தியோகத்தர்  திருமதி .கலாராணி யேசுதாசன் , மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அலுவலக உத்தியோகத்தர்  திருமதி . நிஷாந்தி அருள்மொழி , நிஸ்கோ முகாமையாளர்  பி . கிருபைராஜா , மற்றும் மட்டக்களப்பு பிராந்திய ஊடகவியலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .