(லியோன்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் மழைக்காலங்களில் ஏற்படுகின்ற வெள்ள அனர்த்த அபாயங்களை குறைக்கு வகையில் பல வேலைத்திட்டங்கள்
மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன
இதன்கீழ் மட்டக்களப்பு மாநகர சபையினால் பிரதான வெள்ள வாய்க்கால்களை
துப்பரவு செய்யும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .
மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் மாநகர
பிரதி ஆணையாளர் என் .தனஞ்சயன் ஆலோசனையுடன் மட்டக்களப்பு மாநகர
எல்லைக்குட்பட்ட கருவப்பங்கேணி ,
ஜ்யந்திபுரம் , நாவலடி , விஜெயபுரம் ,சின்ன ஊறணி
ஆகிய கிராம சேவை பிரிவுகளில் உள்ள பிரதான வெள்ள வாய்க்கால்களை துப்பரவு
செய்யும் நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன
இந்த வாய்க்கால்களை துப்பரவு செய்யும் நடவடிக்கையில் மாநகர சபை
உறுப்பினர்கள் . சுகாதார பரிசோதகர் .மாநகர சபை ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்