திருகோணமலை மாநகரசபையின் முதல் ஆணையாளராக கிரான்குளத்தினை சேர்ந்த சிவராஜா நியமனம்


திருகோணமலை மாநகர சபையின் முதல் ஆணையாளராக யு.சிவராஜா கிழக்கு மாகாண ஆளுனரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர இன்று (09) சிவராஜாவுக்கு நியமனக் கடிதத்தை வழங்கினார். 
திருகோணமலை மாநகர சபை முன்னர் ஒரு நகராட்சி மன்றமாக இருந்தது, 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பிறகு மாநகர சபையாக மறுபெயரிடப்பட்டது. 
சிவராஜா தற்போது கிழக்கு மாகாண சமூக சேவைகள் துறையின் மாகாண பணிப்பாளராக பணியாற்றி வருவதுடன் முன்னாள் மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி ஆணையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
இவர் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிரான்குளத்தினை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.