(லியோன்)
சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச்சபையும் மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றமும் இணைந்து ஏற்பாடு செய்யப்பட சுவாமி விபுலானந்தரின் 71 ஆவது சிரார்த்த தின நிகழ்வு மட்டக்களப்பு நீருற்று பூங்கா வளாகத்தில் நடைபெற்றது
சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச்சபையும் மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றமும் இணைந்து ஏற்பாடு செய்யப்பட சுவாமி விபுலானந்தரின் 71 ஆவது சிரார்த்த தின நிகழ்வு மட்டக்களப்பு நீருற்று பூங்கா வளாகத்தில் நடைபெற்றது
மட்டக்களப்பு நீருற்று பூங்கா வளாகத்தில்
நிறுவப்பட்டுள்ள சுவாமி விபுலானந்தர் சிலைக்கு மலர் மாலை அணிவிக்குப்பட்டு
தொடர்ந்து ஆசிரியைகள் மற்றும் மாணவர்களால்
விபுலானந்தரின் கீதம் பாடப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது
மட்டக்களப்பு
இந்து இளைஞர் மன்ற தலைவரும்
ஓய்வுநிலை கல்விப் பணிப்பாளருமான எம் .பவளகாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச்சபை அங்கத்தவர்கள் , மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற அங்கத்தவர்கள் மற்றும் பாடசாலை
மானவர்கள் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்
இதேவேளை மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர்
கல்லூரி தாபகரான முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அதிகளாரின் 71 ஆவது சிரார்த்த தினத்தை சிறப்பிக்கும் வகையில் பாடசாலை சமூகத்தின் ஏற்பாட்டில் வீதி ஊர்வலம்
நடைபெற்றது