(லியோன்)
இலங்கை சமாதான பேரவையினால் ஒழுங்கமைக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சர்வமத பேரவையின் 8 வது மாதாந்த கூட்டத்தினல் தகவல் அறியும் உரிமைச்சட்டம் ஏன் – முக்கியம் – பிரஜைகள் எவ்வாறு இதனை அணுகலாம் என்பது தொடர்பான தகவல் அறியும் உரிமை அடிப்படை அம்சங்கள் தொடர்பான விடயங்களை கொண்ட செயலமர்வு செயற்குழு கூட்டமாக நடைபெற்றது
இதன்போது ஒரு சமூகத்தில் பல்வேறுபட்ட தரங்கள் , மதங்கள் ,வர்க்கங்களுக்குள் உள்வாங்கப்பட்டு
மக்கள் வெவேறு பிரிவினராக பிரிந்து வாழ்கின்ற நிலையில் தங்களுக்குரிய
சம்பிரதாயங்களை பின்பற்றவும் , அவர்களது கலாசார முறைக்கேற்ப செயல்படுத்துவதற்கான
வாய்ப்புக்களை பெற்றுக் கொள்வதற்கும் ,சட்டரீதியாக அங்கீகாரம் வழங்கப்படுகின்ற
நிலைகளை பெற்றுக்கொள்வது தொடர்பான விடயங்கள் நடைபெற்ற செயலமர்வில்
கலந்துரையாடப்பட்டது .
தேசிய சமாதான பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஆர் .மனோகரன்
தலைமையில் மட்டக்களப்பு கல்லடி கிரீன் காடன் விடுதியில் நடைபெற்ற 8 வது மாதாந்த செயற்குழு செயலமர்வில் தேசிய சமாதான பேரவையின் திட்ட
முகாமையாளர் சமன் பெரேரா, வளவாளராக சிரேஷ்ட சுதந்திர ஊடகவியாளர் ஆனந்த ஜயசேகர மற்றும்
மாவட்ட சர்வமத பேரவையின் பல் சமய தலைவர்கள் , பேரவையின் சிவில் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்