திராய்மடுவில் தந்தை செல்வா அறக்கட்டளையின் ஏற்பாட்டில் வைத்தியமுகாம்

தந்தை செல்வாவின் 120வது ஜனன தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் திராய்மடு கிராம அபிவிருத்தி சங்கத்தின் அனுசரணையுடன் இலவச வைத்தியமுகாம் ஒன்று இன்று திங்கட்கிழமை காலை மட்டக்களப்பு திராய்மடுவில் நடைபெற்றது.

திராய்மடு மற்றும் பாலமீன்மடு பகுதி மக்களின் நன்மை கருதி வாமி நல்லதம்பி பாலர் பாடசாலையில் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அறக்கட்டளையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எஸ்.சிவயோகநாதன் தலைமையில் நடைபெற்றது.

இந்த வைத்தியமுகாமின் ஆரம்ப நிகழ்வில் கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் தலைவரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான கே.சிவநாதன்.கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் இணைப்பாளர் செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன், இலங்கை குடும்ப திட்டச்சங்கத்தின் சுகாதார சேவை நிலையத்தினை சேர்ந்த செல்வி சுஜானா யோகராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது குடும்பநல வைத்திய நிபுணரும் கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளருமான டாக்டர் கே.அருளானந்தம்,கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்புபீட விரிவுரையாளர் டாக்டர் ஏ.சிர்பான் ஆகியோர் வைத்திய முகாமை நடாத்தியதுடன் ;,இலங்கை குடும்ப திட்டச்சங்கத்தின் சுகாதார சேவை நிலையத்தினால் இரத்தப்பரிசோதனைகளும் நடாத்தப்பட்டன.

இந்த வைத்தியமுகாமில் பெருமளவான பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்ததை குறிப்பிடத்தக்கது.