பெரியகல்லாறு ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலயத்தின் சித்திரத்தேர் வெள்ளோட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரசித்திபெற்ற முருகன் ஆலயங்களுள் ஒன்றான பெரியகல்லாறு ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலயத்தின் சித்திரத்தேர் வெள்ளோட்டம் அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது.

இயற்கை அழகுடன் வேம்பும் ஆலும் வேலும் கொண்டு பக்தி சிரத்தையுடன் வரும் அடியார்களுக்கு வேண்டும் வினை தீர்த்துவரும் பெரியகல்லாறு சிவசிப்ரமணியர் ஆலயம் அற்புதங்கள் நிறைந்த ஆலயமாக கருதப்படுகின்றது.

இதன் வருடாந்த மஹோற்சவம் கதிர்காமம் உற்சவத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் ஆலயத்திற்கு புதிய சித்திரத்தேர் அமைக்கப்பட்டு நேற்று வெள்ளோட்டம் நடைபெற்றது.

மூலமூர்த்தியாகிய முருகனுக்க சிறப்பு பூஜைகள் நடைபெற்று தேரடியில் விசேட பூஜைகள் மற்றும் பரிகாரங்கள் செய்யப்பட்டு ஆண்கள் ஒரு புறமாகவும் பெண்கள் ஓரு புறமாகவும் வடமிழுக்க தேர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.