Home »
» மண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக செ.சண்முகராசா தெரிவு செய்யப்பட்டார்.
மண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக செ.சண்முகராசா தெரிவு செய்யப்பட்டார்.
Penulis : Suman Thangavel on Tuesday, April 3, 2018 | 3:50 AM
(S.t)
மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச சபையின் அமர்வு உள்ளூராச்சி ஆணையாளர் எம்.வை.சலீம் அவர்களின் தலைமையில் இன்று(03/04/2018) பி.ப 2:30 மணிக்கு நடைபெற்றது.
சபையின் தவிசாளராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செல்லத்தம்பி சண்முகராசா அவர்களும்
உப தவிசாளராக தமிழ் தேசியக் கூட்டமைபின் பொ.செல்லத்துரை அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
தவிசாளர் தெரிவு பகிரங்க வாக்கெடுப்பு மூலம் நடைபெற்றது.
இதில் செ.சண்முகராசாவுக்கு 10 வாக்குகளும் .
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் த.இராமகிருஸ்ணனுக்கு
04 வாக்குகளும் அளிக்கப்பட்டது.
சபையின் வாக்கெடுப்பில்.
த.வி.கூ மூன்று உறுப்பினர்களும்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு உறுப்பினரும் நடுநிலை வகித்தனர்.
ஐ.தே.கட்சியின் உறுப்பினர் ஒருவரும்
சுயேச்சையாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் ஒருவரும்
த.ச.ஜ.கட்சியின் உறுப்பினர் ஒருவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment