நம்பிக்கையின் ஏணி நிறுவனத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம்


(லியோன்)

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கியில் நிலவும் இரத்தப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட நம்பிக்கையின் ஏணி நிறுவனத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்த தான முகாம் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது .


நம்பிக்கையின் ஏணி நிறுவனம் மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல வாழ்வாதார உதவிகளையும் , சமூக பணிகளை முன்னெடுத்து வருகின்றது .

இதன் கீழ் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கியில் நிலவும் இரத்தப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் நம்பிக்கையின் ஏணி நிறுவனத்தின் ஏற்பாட்டில் இந்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட நம்பிக்கையின் ஏணி நிறுவனத்தின் முகாமையாளர் திருமதி ரஞ்சனி மதிதரன் தலைமையில் மாவட்ட நம்பிக்கையின் ஏணி நிறுவன பிரதான மண்டபத்தில் நடைபெற்றது .

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப்பிரிவு வைத்தியர் டாக்டர் க.விவேக் , தாதியர்களும் , நிறுவன உத்தியோகத்தர்கள் ,ஊழியர்கள் , மாணவர்கள் கலந்துகொண்டனர்