மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய தீர்த்தக்குளத்தில் இருந்து துப்பாக்கி மீட்பு

மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய தீர்த்தக்குளத்தில் இருந்து துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய தீர்த்தக்குளத்தினை புனரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்றுவரும் நிலையில் புனரமைப்பு நடவடிக்கையின்போதே இந்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.

இந்திய அமைதிகாக்கும் படை காலத்தில் பாவிக்கப்பட்ட எஸ்.எம்.ஜி.ரக துப்பாக்கியே குளத்தின் புனரமைப்பு பணியின் போது மீட்கப்பட்டதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட துப்பாக்கி மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.