39ஆம் கிராமத்தில் "வள்ளி அம்மன்"வடமோடி கூத்து


(S.t)

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இடங்களில் ஒவ்வொரு வருடமும் புதிய கூத்துக்களை பழகி அரங்கேற்றிய வண்ணமே இருக்கின்றார்கள்.

மட்டக்களப்பு மாவட்டம் பல பாரம்பரிய கலைகள் நிறைந்த மாவட்டமாகும் அவற்றுள் கூத்துக் கலைக்கு தனி சிறப்பு உண்டு.

இங்கு பழகி அரங்கேற்றப்படும் பல கூத்துக்கள் ஊடகங்கள் மூலம் வெளிக்கொண்டுவரப்பட்டாலும் சில கிராமங்களில் ஆடப்படும் கூத்துக்கள் பலருக்கு தெரிவதில்லை

 மட்டக்களப்பு செல்வாபுரம் 39ம் கிராமத்தில்   பழைய கூத்துக் கலைஞர்களும் இளம் கூத்துக் கலைஞர்களும் இனைந்து "வள்ளிஅம்மன்" வடமோடி கூத்தினை பழகியவண்ணம் இருக்கின்றார்கள்.
இந்த கூத்திற்கு அண்ணாவியாராக பன்சேனை கிராமத்தை சேர்ந்த
வைரமுத்து தேவராசா அவர்கள் செயற்படுகின்றார்.