புனித சிசிலியா பெண்கள் கல்லூரி ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு


 (லியோன்)

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய கல்லூரியின் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான  வருடாந்த பரிசளிப்பு  தின நிகழ்வு கல்லூரி அதிபர் அருட்சகோதரி அருள் மரியா தலைமையில் இன்று கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது .


இன்று இடம்பெற்ற  பரிசளிப்பு நிகழ்வில் ஆரம்ப பிரிவு மாணவர்களின்  கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட பரீட்சைகளில் சிறந்த புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கு  பரிசில்களும் , சான்றிதழ்களும் வழங்கப்பட்டது .

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக  மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் என் .மணிவண்ணன் , மட்டக்களப்பு சிறைச்சாலை பிரதம அத்தியட்சகர் கே .எம் . யு , எச் . அக்பர் மற்றும் வலயக் கல்வி அலுவலக  அதிகாரிகள் அருட்தந்தையர்கள் , அருட்சகோதரிகள் ,கல்லூரி ஆசிரியர்கள் மாணவர்கள் , பெற்றோர் , கல்லூரி அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்