(லியோன்)
மட்டக்களப்பு கல்வி
வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய கல்லூரியின் ஆரம்ப பிரிவு
மாணவர்களுக்கான வருடாந்த பரிசளிப்பு தின நிகழ்வு கல்லூரி அதிபர் அருட்சகோதரி அருள்
மரியா தலைமையில் இன்று கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது .
இன்று இடம்பெற்ற பரிசளிப்பு நிகழ்வில் ஆரம்ப
பிரிவு மாணவர்களின் கலை நிகழ்வுகள்
இடம்பெற்றதுடன் பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட பரீட்சைகளில் சிறந்த புள்ளிகளை
பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் ,
சான்றிதழ்களும் வழங்கப்பட்டது .
இந்நிகழ்வில் பிரதம
விருந்தினராக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர்
என் .மணிவண்ணன் , மட்டக்களப்பு சிறைச்சாலை பிரதம அத்தியட்சகர் கே
.எம் . யு , எச் . அக்பர் மற்றும் வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள் அருட்தந்தையர்கள் , அருட்சகோதரிகள்
,கல்லூரி ஆசிரியர்கள் மாணவர்கள் , பெற்றோர் , கல்லூரி அபிவிருத்தி குழு
உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்