புதிய பொதுச்சந்தைக் கட்டிட திறப்பு விழா பிற்போடப்பட்டுள்ளது


(லியோன்)

மட்டக்களப்பு மாநகர சபைக்குப் பொறுப்பான புதிய பொதுச்சந்தைக் கட்டிட தொகுதி 
திறந்து வைக்கப்படவிருந்த நிலையில் நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளதாக மாநகர ஆணையாளர் தெரிவித்தார்


நெல்சிப் திட்டத்தின்கீழ்  32 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு மாநகர சபைக்குப் பொறுப்பான புதிய பொதுச்சந்தைக் கட்டிட தொகுதி  கிழக்குமாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவினால் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் திறந்து வைக்கப்படவிருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணத்தால் பொதுச்சந்தைக் கட்டிட திறப்பு விழா நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளதாக  மாநகர ஆணையாளர் என். மணிவண்ணன் தெரிவித்தார் .

மட்டக்களப்பு மாநகர ஆணையாளர்  தலைமையில் நடைபெறவிருந்த கட்டிட தொகுதி  திறப்பு விழா நிகழ்வுக்கு  மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட பல உயர் அதிகாரிகள் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த  நிலையில் இந்நிகழ்வு  பிற்போடபட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது