துறைநீலாவணை ஸ்ரீ தில்லையம்பலப்பிள்ளையார் ஆலயத்தில் சிவராத்திரி விரதத்தை முன்னிட்டு விசேட ஆன்மீக சொற்பொழிவு.

 (சசி துறையூர்)    
 துறைநீலாவணை ஸ்ரீ தில்லையம்பலப்பிள்ளையார் ஆலயத்தில் சிவராத்திரி விரதத்தை முன்னிட்டு விசேட ஆன்மீக சொற்பொழிவு.

துறைநீலாவணை ஸ்ரீ தில்லையம்பலப்பிள்ளையார் ஆலயத்தில்
மகா சிராத்திரி விரதத்தை முன்னிட்டு  பூசைவழிபாடுகள் இடம்பெற்றதுடன் விரத அடியார்களின்  பக்தி இரசனைக்காக  சேனையூர் சிவநெறி அறப்பணி மன்றத் தலைவர் கஜேந்திரா அவர்களினால் சிவராத்திரி தலைப்பில்  விஷேட சொற்பொழிவு இடம்பெற்றது.

அத்தோடு துறைநீலாவணை தெற்கு விபுலானந்தா அறநெறிபாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

நிகழ்வுகளின் இறுதியில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்திய   சேனையூர் சிவநெறி அறப்பணி மன்றத் தலைவர் கஜேந்திரா ஆலய நிருவாக சபையினால் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார்.