மட்டு - இந்து கல்லூரியின் 72 ஆண்டு கல்லூரி தின நிகழ்வு


  (லியோன்).



மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு இந்து கல்லூரியின் 72 ஆண்டு கல்லூரி தின நிகழ்வு  கல்லூரி அதிபர் எஸ் டி முரளிதரன்  தலைமையில் இன்று கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது


ஆரம்ப நிகழ்வாக கல்லூரி ஸ்தாபகர் உருவ சிலைக்கு மலர் மலை அணிவிக்கப்பட்டது இதனை தொடர்ந்து  தேசிய கொடி, பாடசாலை கொடி ஏற்றப்பட்டு கல்லூரி தின நிகழ்வுகள்  ஆரம்பமானது  

இந்நிகழ்வில் மன்முனை வடக்கு  கோட்டக்கல்வி பணிப்பாளர் கே அருள்பிரகாசம் பாடசாலை மேம்பாட்டுத்திட்ட வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் (தமிழ்)  டி .யுவராஜன்,  மற்றும் வலயக்கல்வி அலுவலக கல்விப்பணிப்பாளர்கள் கல்லூரி  அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ,கல்லூரி பழைய மாணவர்கள் ,கல்லூரி ஆசிரியர்கள் , மாணவர்கள் ,பெற்றோர்கள்  என பலர்  கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கல்லூரிக்கு அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்த கல்லூரி பழைய மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் , கல்லூரி தினத்தை சிறப்பிக்கும் வகையில் மட்டக்களப்பு வயோதிபர் இல்லத்திற்கு உளர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது