ஐக்கிய தேசிய கட்சி இம்முறை அனைத்து பகுதிகளிலும் வெற்றிபெறும்

இம்முறை மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி நூறு வீதம் வெற்றிபெறும் என அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எஸ்.மகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் 08ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் எஸ்.ராஜேந்திரனை ஆதரிக்கும் இறுதி பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.
மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் 08ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் எஸ்.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பெருமளவான கட்சி ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது வேட்பாளர் ராஜேந்திரன் தனது இறுதி பரப்புரையினையும் நிகழ்த்தினார்.
தமிழ் மக்கள் தமக்கான அபிவிருத்தியை பெறவேண்டுமானால் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதன் மூலமே அவற்றினை பெற்றுக்கொள்ளமுடியும் என இங்கு உரையாற்றிய மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் 08ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் எஸ்.ராஜேந்திரன் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்படும் நிலையில் இந்த தேர்தலில் சிந்தித்து வாக்களிக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள்விடுத்தார்.