மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி


 (லியோன்)

கல்வி அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகளில் மாணவ தலைமைத்துவ பயிற்சிக்காக பதிவு செய்யப்பட பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட 43 பாடசாலை மாணவர்களுக்கு மட்டக்களப்பு கல்லடி 38 வது தேசிய மாணவ படை  அணியினால் தலைமைத்துவ பயிற்சிகள் வழங்கப்பட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது


இதன் கீழ்  மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் பாடசாலையாக மட்டக்களப்பு கல்வி வலயத்தின்  மட்டக்களப்பு மெதடிஸ்த கல்லூரி தெரிவு செய்யப்பட்டு இன்று மாணவர்களுக்கான தலைமைத்துவம் , மாணவ ஒழுக்க மேம்பாடு , அணிவகுப்பு போன்ற பயிற்சிகள் மட்டக்களப்பு கல்லடி  38 வது தேசிய மாணவ படை  அணியின் லெப்டினல் கேணல்  ஜே எ யு ஜே பி . ஜெயசூரிய தலைமையில் பயிற்சிகள் வழங்கப்பட்டது

இந்த பயிற்சி நிகழ்வில் மட்டக்களப்பு கல்லடி  38 வது தேசிய மாணவ படை  அணியின் இராணுவ அதிகாரிகள், மத்திய  கல்லூரி மாணவர்கள் ,கல்லூரி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்