மாணவர்களுக்கான “ கற்றல் திறன்களுக்கான செயலேடு “ வெளியீட்டு நிகழ்வு

 (லியோன்)

மட்டக்களப்பு கல்வி வலய அலுவலகம் ஏற்பாட்டில்  மட்டக்களப்பு  வலயக் கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன்  தலைமையில் தரம் ஐந்து மாணவர்களுக்கான  “ கற்றல் திறன்களுக்கான செயலேடு  “ எனும் தலைப்பிலான செயலேடு வெளியீட்டு  நிகழ்வு (06) மட்டக்களப்பு மகாஜன கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது .




 ஓய்வுநிலை கோட்டக்கல்விப் பணிப்பாளர் எ .சுகுமாரன்  தொகுப்பில் 2018 ஆம் ஆண்டு  தரம் ஐந்து புலமைப்பரிசில்  பரீட்சைக்கு தோற்றவுள்ள  மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் திறன்களை விருத்தி செய்யும்  நோக்கில் இந்த செயலேடு  வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது  


இந்த செயலேடு  வெளியிட்டு நிகழ்வில்  மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் எஸ் .மனோகரன் மட்டக்களப்பு ,மட்டக்களப்பு கல்குடா வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி எஸ் .கங்கேஸ்வரன் , மண்முனை வடக்கு  கோட்டக்கல்வி  பணிப்பாளர் கே .அருள்பிரகாசம் ,வலயக்கல்வி அலுவலக  பிரதி கல்விப் பணிப்பாளர் ( திட்டமிடல் ) ஹைதரலி  மற்றும் கல்வி வலய பாடசாலைகளின் அதிபர்கள் ,ஆசிரியர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள்  கலந்து கொண்டனர் .