(லியோன்)
இலங்கை நாட்டின் முன்னேற்றப் பாதையிலே கல்வி ,விளையாட்டு , வரலாறு ,
உளவியல் ,சமூக பொருளாதாரம் மற்றும் ஆன்மிகம் போன்ற துறைகளில் கத்தோலிக்க மத
குருக்கள் கணிசமானளவு பங்களிப்பு செய்கிறார்கள் .
கத்தோலிக்க மதகுருமார்களிலும் சிறப்பாக யேசு சபைத் துறவிகள் பல
சேவைகள் செய்துகொண்டு வருகிறார்கள் .
அந்த வகையில் யேசு சபை துறவி போல் சற்குண நாயகம் ஒரு கத்தோலிக்க
குருவின் யேசு சபைத் துறவியின் பணி என்ற
வரம்பை கடந்த தனி மனித ஒருங்கமைவிற்கு,
சமுதாய ஒருங்கமைவிற்கு தலைமை வகுத்து , மனிதத்தையும் ,சமுதாயத்தையும் கட்டி
எழுப்பி இறையியலுக்குள் வலுவூட்டி ஆன்மீக வழிகாட்டியாக விளங்குகின்ற யேசு சபை
துறவி போல் சற்குண நாயகம் அடிகளாரின் 80 பிறந்த தினத்தை சிறப்பிக்கும் விசேட திருப்பலி இன்று ஒப்புகொடுக்கப்பட்டது .
மட்டக்களப்பு மறை மாவட்ட கிறிஸ்தவ வாழ்வு சமூகம் ஒழுங்கமைப்பில் யேசு
சபை துறவி போல் சற்குண நாயகம் அடிகளாரின் தலைமையில் அருட்தந்தை லோரன்ஸ் லோகநாதன்
,அருட்தந்தை றோசான் ,அருதந்தை நவாஜி ,அருட்தந்தை ஜோசெப் மேரி ஆகியோர் இணைந்து
இந்த திருப்பலியை ஒப்புகொடுத்தனர் .
இந்த விசேட திருப்பலியில்
மட்டக்களப்பு மறை மாவட்ட கிறிஸ்தவ வாழ்வு சமூகம் அங்கத்தவர்கள் மற்றும்
புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலய பங்கு மக்கள் கலந்து சிறப்பித்தனர் .