மண்டூர்-வெல்லாவெளி கறுத்த பாலம் புனரமைப்பு பணிகள் தாமதம்




போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மண்டூர்-வெல்லாவெளி வீதியில் உள்ள கறுத்தப்பாலம் முற்றாக சேதமடைந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக இப்பாலத்திற்கான புரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போதும் தற்பொழுது இடை நடுவே நிறுத்தப்பட்ட நிலமையில் காணப்படுகின்றது.வீதி அதிகார சபைக்குட்பட்ட இப்பாலத்திற்கு அருகாமையில் ஏற்கனவே தற்காலிக பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.இத்தற்காலிக பாலத்தினால்  நாளாந்தம் கனரக வாகனங்கள் பல ஊடறுத்துச் செல்வதனால் இதுவும் சேதமடையக் கூடிய வாய்ப்புள்ளதாக இவ்வீதியால் பாயணிக்கும் பொதுமக்கள் விஷனம் தெருவித்து வருகின்றனர்.இவ்விடயம் சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்தும் ஆக்க பூர்வமான நடவடிக்கை எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை எனவே இப்பாலத்தை மிகவிரைவில் புனரமைத்து தருமாறு  பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

Add caption
Add caption