பாவற்கொடிச்சேனை சுகாதார நிலையம் சிரமதானம்.

பாவற்கொடிச்சேனை சுகாதார நிலையம் சிரமதானம்.

மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் பாவற்கொடிச்சேனை பாரதி இளைஞர்கழக உறுப்பினர்களால் பாவற்கொடிச்சேனை சுகாதார நிலைய வளாகம்  துப்பரவு செய்யப்பட்டது.

"நமது சூழலை நாம் பாதுகாப்போம் , நேசிப்போம் "எனும் தெனிப்பொருளில்  இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த சிரதான நிகழ்வில் நிலைய வளாகம் மிகவும் அழகான முறையில் துப்பரவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சிரமதான வேலைத்திட்டத்தில் இளைஞர் கழக நிருவாகிகள் ஆர்வத்துடன் பங்குபற்றியதுடன் பாவற்கொடிச்சேனை பாரதி இளைஞர் கழகம் மாதாந்தம் தொண்டர் அடிப்படையில்  ஒரு சிரமதான வேலைத்திட்டத்தை முன்னெடுத்து
வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.