கோரகல்லி மடு இரமணமகரிஷி வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி இன்று.

(சசி துறையூர்)
மட்/கல்குடா கோரகல்லி மடு இரமணமகரிஷி வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுணர் விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் இன்று பாடசாலை அதிபர் திரு எஸ்.ஆனந்தன் தலைமையில் பாடாசாலை மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு, நிகழ்வை சிறப்பித்ததுடன், வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களையும் வழங்கி வைத்தார்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் இந்த பாடசாலை மாணவர்கள் மிகுந்த ஒழுக்கமுள்ளவர்கள் அதனை அவர்களின் திறமைகள் இங்கு வெளிப்பட்ட விதத்திலிருந்து என்னால் உணர முடிகின்றது, அத்தோடு இன்றைய விளையாட்டு நிகழ்வுகள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது அந்த வகையில் ஏற்பாட்டு குழுவினருக்கு எனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டார்.

 மேலும் இந் நிகழ்வில் வலயக்கல்விப்பணிப்பாளர் , கேட்டக்கல்வி பணிப்பாளர், ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது