(லியோன்)
தேசிய பாரிசவாத விழிப்புணர்வு நடை பவனி இம்முறை மட்டக்களப்பு
மாவட்டத்தில் எதிர் வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளது
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ளவுள்ளார்
இது தொடர்பான மீளாய்வு கலந்துரையாடல் இன்று
மட்டக்களப்பில் நடைபெற்றது .
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் மாவட்ட செயலகமும் இணைந்து
நடாத்தும் தேசிய பாரிசவாத விழிப்புணர்வு நடைபவனி தொடர்பான மீளாய்வு கலந்துரையாடல்
இன்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷனி
ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது .
இன்று நடைபெற்ற மீளாய்வு கலந்துரையாடல் நிகழ்வில்
மாவட்ட பிரதேச செயலாளர்கள் ,கல்வித்திணைக்கள அதிகாரிகள் , வைத்திய அதிகாரிகள் , பொலிஸ்
திணைக்கள அதிகாரிகள் , மாநகர ஆணையாளர் ,பிரதி ஆணையாளர் ,மாவட்ட செயலக
உத்தியோகத்தர்கள் , அரச சார நிறுவன பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்