தேசிய பாரிசவாத விழிப்புணர்வு நடை பவனி தொடர்பான மீளாய்வு கலந்துரையாடல் (video & photos)


(லியோன்)

தேசிய பாரிசவாத விழிப்புணர்வு நடை பவனி இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர் வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளது
 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ளவுள்ளார்

இது தொடர்பான மீளாய்வு கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது .

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்தும் தேசிய பாரிசவாத விழிப்புணர்வு நடைபவனி தொடர்பான மீளாய்வு கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் மாவட்ட மேலதிக  அரசாங்க அதிபர் திருமதி  சுதர்ஷனி ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது .

இன்று நடைபெற்ற மீளாய்வு கலந்துரையாடல் நிகழ்வில் மாவட்ட பிரதேச செயலாளர்கள் ,கல்வித்திணைக்கள அதிகாரிகள் , வைத்திய அதிகாரிகள் , பொலிஸ் திணைக்கள அதிகாரிகள் , மாநகர ஆணையாளர் ,பிரதி ஆணையாளர் ,மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் , அரச சார நிறுவன பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்