உழவர்களின் இல்லங்களில் விசேட மாட்டுப்பொங்கல் நிகழ்வுகள்

(லியோன்)

தமிழர்களின் முக்கிய பண்டிகையான உழவர் திருநாளாம்  தைத்திருநாளை   உலகெங்கும் உள்ள  உழவர்கள்  மிக சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் ..


உழவர் திருநாளின் இரண்டாம் நாளான இன்று  மாட்டுப்பொங்கல்  விசேட பூஜை வழிபாடுகள் உழவர்களின்  இல்லங்களில்  செய்யப்பட்டு வருகின்றன .

இதற்கு அமைய மட்டக்களப்பு புதூர் – திமிலத்தீவில் உள்ள சந்திரன் என்பவருடைய மாட்டுப்பன்னையில்  விசேட மாட்டுப்பொங்கல் நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன ,


உழுதுண்டு வாழும் தமிழர் பண்பாட்டின் பாரம்பரிய பண்பாட்டு முறையில் நடைபெற்ற மாட்டுப்பொங்கல் நிகழ்வில் முன்னாள் கிழக்குமாகாண விவசாய ,கால்நடை  அமைச்சர் கே .துரைராஜசிங்கம் ,  வீச்சுகல்முனை அன்னம்மாள் ஆலய பங்கு தந்தை இன்னாசி ஜோசப் ,பொதுசுகாதார பரிசோதகர் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்