தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன் உதவி!

செங்கலடி கணபதி நகர் பகுதியில் திடீரென ஏற்பட்ட தீவிபத்து காரணமாக பாதிக்கப்பட்டு தங்களது வீடு மற்றும் அனைத்து பொருட்களும் முற்றாக எரிந்த நிலையில் செய்வதறியாது தவித்து வந்த குடும்பத்தினரை. 

சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ. நிலாந்தன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடுப்பத்தின் பிரச்சனைகள் குறித்து ஊடகங்கள் வாயிலாக வெளிக்கொண்டுவந்து. அந்த குடும்பத்திற்கான உதவிகள் கிடைப்பதற்காக தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றார். நிலாந்தன் அவர்களின் கோரிக்கைக்கு அமைய வெளிநாட்டில் இருந்தும் உள் நாட்டில் இருந்தும் பலர் உதவிகளை வழங்க வருகின்றனர். 

அந்த வகையில் பிரதேச சபை உறுப்பினர் செ. நிலாந்தன் ஊடாக பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கான சமையல் உபகரணங்கள், மின் விசிறி, ரைஸ் குக்கர், கேஸ் அடுப்பு, நுளம்புவலை, பாடசாலை புத்தகப் பை, சப்பாத்து, உள்ளிட்ட பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.