(லியோன்)
கல்வி அமைச்சின் பணிப்புரைக்கு அமைவாக முதலாம்
தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வுகள்
இன்று நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில்
நடைபெற்றது
இதற்கு அமைய மட்டக்களப்பு
மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு
முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வுகள் இடம்பெற்று
வருகின்றன .
இதன் கீழ்
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனை வடக்கு கல்வி கோட்டத்தின் மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர்
வித்தியாலயத்திற்கு முதலாம் தரத்திற்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு வித்தியாலய அதிபர்
திருமதி ஹரிதாஸ் தலைமையில் நடைபெற்றது .
நிகழ்வில் தரம் 02 மாணவர்கள் முதலாம் தரத்திற்கு வருகை தந்த புதிய மாணவர்களை மலர் மாலை
அணிவித்து வரவேற்றதுடன் மாணவர்களின் வரவேற்பு கலை நிகழ்வுகளும் பாடசாலை மண்டபத்தில்
இடம்பெற்றது .
இந்நிகழ்வில் மண்முனை
வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் கே
.அருள்பிரகாசம் , உதவிக் கல்விப்பணிப்பாளர் (உடற்கல்வி) வி
.லவக்குமார் , பாடசாலை பழைய மாணவர் சங்க
செயலாளர் திருமதி செல்வி மனோகரன் , ஓய்வுநிலை வங்கி முகாமையாளர் பாஸ்கரன் மற்றும் பாடசாலை
ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர் .
இந்நிகழ்வில் பாடசாலை கல்வி
சமூகத்தினரினால் ஓய்வுநிலை வங்கி
முகாமையாளர் கே .பாஸ்கரன் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது