முதலாம் தரத்திற்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

(லியோன்)

கல்வி அமைச்சின் பணிப்புரைக்கு அமைவாக   முதலாம் தரத்திற்கு மாணவர்களை  இணைத்துக்கொள்ளும் நிகழ்வுகள்  இன்று  நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் நடைபெற்றது


இதற்கு அமைய  மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள  பாடசாலைகளுக்கு முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும்  நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன .

இதன் கீழ் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனை வடக்கு கல்வி கோட்டத்தின்   மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் வித்தியாலயத்திற்கு முதலாம் தரத்திற்கு  மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு வித்தியாலய அதிபர் திருமதி ஹரிதாஸ் தலைமையில்  நடைபெற்றது  .

நிகழ்வில் தரம் 02 மாணவர்கள்  முதலாம் தரத்திற்கு  வருகை தந்த புதிய மாணவர்களை மலர் மாலை அணிவித்து வரவேற்றதுடன் மாணவர்களின் வரவேற்பு கலை நிகழ்வுகளும்  பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது  .

இந்நிகழ்வில் மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர்  கே .அருள்பிரகாசம் ,  உதவிக் கல்விப்பணிப்பாளர் (உடற்கல்வி) வி .லவக்குமார்  , பாடசாலை பழைய மாணவர் சங்க செயலாளர் திருமதி செல்வி மனோகரன் , ஓய்வுநிலை வங்கி முகாமையாளர்  பாஸ்கரன்  மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர் .


இந்நிகழ்வில் பாடசாலை கல்வி  சமூகத்தினரினால்  ஓய்வுநிலை வங்கி முகாமையாளர் கே .பாஸ்கரன் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது