தேசிய சம்மேளன பிரதி நிதி தெரிவு

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பிரதான தொண்டர் அமைப்பான இலங்கை தேசிய இளைர் கழக சம்மேளனத்திற்க்கு மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதிநிதித்துவம் தெரிவு.

ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஆறுமுகத்தான் குடியிருப்பு விபுலானந்தா  இளைஞர் கழகத்தின் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்கழகங்களின் சம்மேளன உப செயலாளருமான,  ஏறாவூர் பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் உபசெயலாளர்
செல்வன் நமசிவாயம் திவாகர் தேசிய சம்மேளன பிரதி நிதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தேசிய பிரதிநிதிகள் தெரிவு செய்வதற்க்கான கூட்டம் நேற்று திங்கட்கிழமை 11.12.2017 மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் இடம் பெற்றது.

இக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர், மாவட்ட இளைஞர்சேவை அதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட பதினான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளினதும் இளைஞர் சேவை அதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவர், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட மட்டக்களப்பு  மாவட்ட  பிரதேச சம்மேளனங்களினுடைய நிறைவேற்றுகுழு நிருவாகிகள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.