பாண்டிருப்பில் மகாகவி பாரதியாரின் பிறந்ததின நிகழ்வு

அம்பாறை,கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாண்டிருப்பு அகரம் கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் மகாகவி பாரதியாரின் பிறந்ததினம் மற்றும் விருந்து சிற்றிதழின் நான்காம், ஐந்தாம் இதழ் வெளியீட்டு நிகழ்வு ஓய்வுநிலை அதிபர் அகரம் ஆலோசகர் இ.இராஜரெத்தினம் தலைமையில் நேற்று திங்கட்கிழமை மாலை பாண்டிருப்பில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை மாநகரசபையின் பொறியியலாளர் ரி.சர்வானந்தா கலந்து சிறப்பித்தார். சிறப்பு அதிதியாக கவிஞர் கலாபூஷணம் தேனூரான் கலந்து கொண்டார். கௌரவ அதிதியாக மனிதாபிமான உதவி அமைப்பின் பணிப்பாளர் கே.விநாயகமூர்த்தி கலந்து கொண்டார்.

முதலில் பாரதியார் படத்திற்கு மூத்த கவிஞர் மு.சடாட்சரன் மலர் மாலை அணிவித்தார். இறைவணக்கம், தமிழ் மொழி வாழ்த்துப்பாடல் ஆகியவற்றுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

விருந்து நூல் நயவுரையினை எழுத்தாளர் சபாசபேஷன் நிகழ்த்தினார். பாரதியார் பற்றிய பகிர்வுகளை கவிஞர் மு.சடாட்சரன், கவிஞர் தேனூரான், கவிஞர் மருதமுனை விஜிலி, ஓவியர் ஆனந்தத்தில் ஒரு அனல் ஆகியோர் பகிர்ந்து கொண்டனர்.