( லியோன்) .
சமுதாயஞ்சார் சீர்திருத்த திணைக்களத்தின் மட்டக்களப்பு
மாவட்டத்திற்கான பிராந்திய காரியாலயம் சமுதாயஞ்சார் சீர்திருத்த திணைக்கள சிரேஷ்ட
ஆணையாளர்களான செல்வி சுசந்தி ஜயசிங்க
மற்றும் எம் பி டி லயனல் குணதிலக ஆகியோரின் தலைமையில் திறந்து
வைக்கப்பட்டுள்ளது
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி
மாணிக்கவாசர் கணேசராஜா கலந்துகொண்டதுடன் நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் ஞாபக
சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்ட்டது
.
நிகழ்வில் கிழக்குமாகாண சமுதாயஞ்சார் சீர்திருத்த திணைக்கள உத்தியோகத்தர்
என் பி எல் எம் . இலியாஸ் ,சமுதாய சீர்திருத்த பிராந்திய காரியாலய
உத்தியோகத்தர்கள் , சமுதாய சீர்திருத்த பிராந்திய காரியாலய வேலை பரிசோதகர்
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ,சட்ட உதவி குழு உத்தியோகத்தர்கள் ,நன்னடத்தை அலுவலக
உத்தியோகத்தர்கள் , மனித உரிமை அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோரா கலந்துகொண்டனர்