(லியோன்)
சர்வதேச சிறுவர் மற்றும்
ஆசிரியர் தின நிகழ்வு மட்டக்களப்பு அமிர்தகழி கருணை பாலர்
பாடசாலையில் நடைபெற்றது .
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு
அமிர்தகழி கருணை பாலர் பாடசாலையில் அதிபர் திருமதி .பிரதீபா தர்ஷன் தலைமையில் சர்வதேச மற்றும் ஆசிரியர் தின
நிகழ்வு பாடசாலையில்
இன்று பிற்பகல் நடைபெற்றது .
சிறுவர் தினத்தை
சிறப்பிக்கும் வகையில் சிறார்களின் வினோத கலை நிகழ்சிகளும் சிறார்களுக்கு மற்றும்
ஆசிரியர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலயக் கல்வி உதவிக் கல்வி பணிப்பாளர் எம் .புவிராஜா , சிறப்பு அதிதிகளாக
மண்முனை வடக்கு பிரதேச செயலக சிறுவர் மேன்பாட்டு உத்தியோகத்தர் .டி .மேகராஜன் , மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை குழந்தை நல
வைத்தியர் டி . பிரபா சங்கர் ஆகியோருடன் பாடசாலை சிறார்களும் , இவர்களின் பெற்றோர்களும் கலந்துகொண்டனர் .