பாலமீன்மடு , திராய்மடு மீனவ சங்கத்தின் ஏற்பாட்டில் வாணி விழா நிகழ்வு

(லியோன்)

நாடளாவிய ரீதியில் அனைத்து தமிழ் பிரதேசங்களில் வாணிவிழா நிகழ்வுகள் மிக சிறப்பாக நடைபெற்றது .


மட்டக்களப்பு மாவட்டத்திலும் வாணிவிழா நிகழ்வுகள் மிக சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது .

இவ்விழாவினை சிறப்பிக்கும் வகையில் மட்டக்களப்பு   பாலமீன்மடு மற்றும் திராய்மடு  மீனவ சங்கத்தின்  ஏற்பாட்டில்   வாணி  விழா   சிறப்பாக  பூஜைகள் முகத்துவாரம் மீனவ சங்க மண்டபத்தில் நடைபெற்றது .

முப்பெரும்  தேவிகளுக்குரிய   புனித தினமாக   புரட்டாதி மாதத்தில்  ஒன்பது  நாட்களும்   அனுஸ்டிக்கப்படுகின்ற நவராத்திரி  தினத்தை சிறப்பிக்கும் வாணி  விழா சிறப்பு  பூஜைகள் சிவ பிரம்மஸ்ரீ ராமச்சந்திர  குருக்கள் தலைமையில்  விசேட பூஜைகள்  நடைபெற்றது


இந்த வாணி விழா பூஜை  நிகழ்வில்   பாலமீன்மடு மற்றும் திராய்மடு மீனவர்கள் கலந்துகொண்டனர்