(லியோன்)
சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில்
இன்று நடைபெற்று வருகின்றது .
இதற்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் அணைத்து பகுதிகளிலும்
இந்நிகழ்வு இடம்பெற்று வருகின்றது .
இதன் கீழ் மட்டக்களப்பு கல்வி வலயதிற்குற்பட்ட மட்டக்களப்பு அமிர்தகழி
மெதடிஸ்த பாலர் பாடசாலையில் சிறுவர் தின நிகழ்வு பாடசாலை அதிபர் திருமதி .
ஞானராஜன் ஜெயராஜனி தலைமையில் பாடசாலையில்
இன்று நடைபெற்றது .
சிறுவர் தினத்தை
சிறப்பிக்கும் வகையில் சிறார்களின் வினோத கலை நிகழ்சிகளும், சிறார்களுக்கான பரிசில்கள்
வழங்கி கௌரவிக்கப்பட்டனர்
இந்நிகழ்வில் அதிதியாக அமிர்தகழி மெதடிஸ்த ஆலய அருட் திருமதி . கிரேஸ்
ரொபின் , சிறுவர்களுக்கான கௌவுன்சிலர் திருமதி . இ .டி . மாணிக்கம் , அமிர்தகழி
மெதடிஸ்த ஆலய முன்னாள் உக்கிரானகாரர் செல்வி .வசந்த மற்றும் பாடசாலை சிறார்களின்
பெற்றோர்கள் கலந்துகொண்டனர்