மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று மாலை நடைபெற்ற இருவேறு விபத்துகளில் நான்கு சிறுவர்கள் பலியானமை மாவட்;டத்தில் பெரும் கவலையினை ஏற்படுத்தியுள்ளது.மட்டக்களப்பு வாகரை பகுதியில் மீன்பிடிக்கச்சென்றுவந்த குடும்பம் ஒன்றின் மூன்று பிள்ளைகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
வாகரை,கறுவாச்சேனை பகுதியில் மீன்பிடிக்கச்சென்று திரும்பிய நிலையில் குளத்தில் மூழ்கியே உயிரிழந்துள்ளனர்.
குளத்தின் ஆழமான பகுதியில் மூழ்கிய நிலையிலேயே சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பகுதிக்கு சென்ற வாகரை பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேபோன்று மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உறுகாமம் பகுதியில் பஸ் மோதியதில் ஏழு வயதுடைய பி.கவிசேக் என்னும் சிறுவன் உயிரிழந்துள்ளார்.
செங்கலடியிலிருந்து உறுகாமத்திற்கு சென்று பஸ்ஸில் இறங்கி வீதியை கடக்கமுனைந்தபோது எதிர்திசையில் வந்த பஸ் மோதியே இந்த விபத்து இடம்பெற்றள்ளது.
கரடியனாறு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் பஸ்சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் சடலம் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.