நாடளாவிய ரீதியில் 15000 ஆசிரியர்கள் சேவையில்

நாடளாவிய ரீதியில் 15000 ஆசிரியர்களை 
சேவையில் இணைத்துக்கொள்ள கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இதனை தெரிவித்துள்ளார். க.பொ.த(சா/த) பரீட்சையில் சித்தியடையத் தவறும் மாணவர்களுக்கான தொழில்ரீதியான கற்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்காக புதிதாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய தேவை மற்றும் ஆசிரியர் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் நிமித்தம் இத்தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.